100நாள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் என ஏசி. எஸ் வாக்குறுதி

58பார்த்தது
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஏசி சண்முகம் அணைக்கட்டு அருகே உள்ள அகரம் சேரி, சின்னசேரி, பள்ளிக்குப்பம், அக்ரஹாரம், குருவராஜபாளையம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரச்சாரத்தின் போது குருவராஜபாளையம் பகுதியில் ஏசி சண்முகம் பேசுகையில், "தேர்தல் வாக்குறுதியாக பாரத பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோடி இலவச வீடுகளை கட்டி தருவதாக கூறியுள்ளார். அதில் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் வீடுகளை நான் இந்த தொகுதிக்கு கொண்டு வந்து விடுவேன். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றப்படும். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும், " என்றார்.

தொடர்புடைய செய்தி