ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம்!

79பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் முன்பு ஏ ஐ டி யு சி ஐ என்டியுசி, சிஐடியு,
எல்பி எஃப் உள்ளிட்ட மத்திய சங்கங்கள் சார்பில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெறக் கோரியம் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியு சி மாநில துணைத்தலைவர் தேவதாஸ் கலந்து கொண்டு மத்திய அரசு கொண்டு வந்துள்ள
மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நீட் தேர்வு ரத்து செய்ய கோரியும் , தொழிலாளர்கள் விரோத நான்கு சட்ட தொகுக்க தொகுப்புகளை திரும்பப் பெறவும் விவசாயிகளின் விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் இந்த ஆர்பாட்டத்தில் சி ஐ டி யு துணைத் தலைவர் அருள் சீனிவாசன், மணிமாறன், மதி உள்ளிட்ட மத்திய சங்கங்களை சேர்ந்த பல்வேறு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி