மின்சாரம் தாக்கி 5 வயது குழந்தை உயிரிழப்பு

68பார்த்தது
மின்சாரம் தாக்கி 5 வயது குழந்தை உயிரிழப்பு
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி என்னும் பகுதி அருகே சம்யுக்தா என்ற 5 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தை தொட்டபோது, மின்சாரம் தாக்கி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்சாரம் குறித்து மின்வாரிய ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி