கல்லூரி மாணவி சர்வதேச அளவில் சிலம்பு போட்டியில் வெற்றி

74பார்த்தது
வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி சர்வதேச அளவில் நடைபெற்ற சிலம்பம் ஒற்றை கம்பு சண்டை போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவிக்கு கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா. மலேசியா நாட்டில் கடந்த 30ஆம் தேதி சர்வதேச அளவில் சிலம்பம், கராத்தே, யோகா ஆகிய போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் இந்தியா, மலேசியா, தாய்lலாந்து, ஶ்ரீலங்கா உள்ளிட்ட 10 நாடுகளில் இருந்து மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். இதில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் படிக்கும் மாணவி ஏ. சினேகா கலந்து கொண்டு சர்வதேச சிலம்பம் கம்பு சண்டை போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சாதனை படைத்த மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு மற்றும் கவுரவிக்கும் நிகழ்ச்சி கல்லூரி சுவாமி விவேகானந்தா உள்ளரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி இணைத்தலைவர் சி. லிக்மி சந்த் ஜெயின் தலைமை வகித்தார்.

தொடர்புடைய செய்தி