ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்து- உயிரிழப்பு 14 ஆக உயர்வு!

68பார்த்தது
ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்து- உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
உத்தராகண்ட் மாநிலம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழப்பு 14 ஆக உயர்ந்துள்ளது. எஞ்சியுள்ளவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நொய்டாவில் இருந்து 17 பேர் அடங்கிய டெம்போ டிராவலர் வேன் உத்தராகண்ட் மாநிலத்துக்கு சென்றுள்ளது. ரிஷிகேஷ் பத்ரிநாத் நெடுஞ்சாலை அருகே உள்ள ருத்தரபிரயாக் அருகே வேன் சென்ற சமயம் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தலைக்குப்புற உருண்டு, நெடுஞ்சாலையில் கீழே ஓடிக்கொண்டிருந்த அலகனந்தா ஆற்றில் விழுந்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி