மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், பீகாரில் நடந்த நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தற்போது நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 9 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நீட் முறைகேடு காரணமாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.