"தவெக-வில் இவர்களுக்கு மட்டுமே பதவி" - புஸ்ஸி ஆனந்த்

76பார்த்தது
திருப்பூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “கட்சியில் யாரெல்லாம் உழைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தமிழக வெற்றி கழகத்தில் பதவிகள் வழங்கப்படும். கட்சிக்காக சைக்கிளில் சென்று போஸ்டர் ஒட்டுபவர்களுக்கு தான் பதவி கிடைக்கும். எவ்வளவு பெரிய பணக்காரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இங்கு மதிப்பு இல்லை” என தெரிவித்துள்ளார்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி