விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததற்கான காரணத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேல் இடத்தின் (பாஜக) உத்தரவு. மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்றாகும். பாஜக கூட்டணியில் உள்ள பாமகவை வெற்றிப் பெற வைப்பதற்காகவே அதிமுக இந்த தேர்தலை புறக்கணித்துள்ளது” என விமர்சித்துள்ளார்.