நிறம், சுவை மற்றும் கலாவதியை அதிகரிக்கும் ரசாயனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த உத்தரவுகள் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வருகிறது. இவற்றால் மாரடைப்பு, உடல் வலிமை இழப்பு போன்ற கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என அந்நாட்டு 'உணவு மற்றும் மருந்து நிர்வாகம்' தெரிவித்துள்ளது. உணவுப் பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் 'உணவு சேர்க்கைகள்' உடல் நலத்திற்கு கேடு விளைவிப்பதாக எச்சரிக்கிறது. இதனால் பல உணவுப் பொருட்கள் தயாரிப்பிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.