ஆன்லைன் பணம் செலுத்தும் செயலியான பேடிஎம்-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது மத்திய அரசு. பேடிஎம்-க்கான ரூ. 50 கோடி முதலீட்டை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. பேடிஎம் இன் தாய் நிறுவனமான One 97 Communications, சீன உரிமையுடன் இணைக்கப்பட்டுள்ளதால், பேடிஎம் இன் முதலீடுகளை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. சமீபத்தில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் பரிவர்த்தனைகளுக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.