இன்றிரவு 1 மணி நேரம் விளக்குகளை அணைக்கவும்...

547பார்த்தது
இன்றிரவு 1 மணி நேரம் விளக்குகளை அணைக்கவும்...
இன்று நாடு முழுவதும் புவி நேரம் அனுசரிக்கப்படவுள்ளது. இன்று இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒரு மணிநேரம் மின்விளக்குகளை அணைக்குமாறு சுற்றுச்சூழல் துறை கேட்டுக் கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பைக் குறைக்கும் வகையில் அனைத்து மக்களும் இந்தத் திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும் ஆண்டுக்கு ஒருமுறை புவி நேரம் நடத்தப்படுகிறது. இந்த திட்டம் உலகம் முழுவதும் 190 நாடுகளில் பின்பற்றப்படுகிறது.

தொடர்புடைய செய்தி