பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேருக்கு சிகிச்சை

64பார்த்தது
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 3 பேருக்கு சிகிச்சை
விழுப்புரம், திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று (ஜுலை 4) காலை சிலர், உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒருவரின் இலையில் ஊற்றிய சாம்பாரில் பல்லி கிடந்துள்ளது. இதையறியாமல் சாப்பிட்ட சிலர் லேசான மயக்கம் ஏற்படுவதாகவும், வாந்தி வருவதாகவும் கூறினர். உடனே ஊழியர்கள் அவர்கள் 3 பேரையும் ஆட்டோ மூலம், விழுப்புரத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி