மனோரமா சிறு வயது வாழ்வில் நடந்த சோகம்

85பார்த்தது
மனோரமா சிறு வயது வாழ்வில் நடந்த சோகம்
மனோரமாவின் தந்தை காசியப்பன், மனோரமாவின் தாயார் ராமாமிர்தம் தங்கையை 2வது திருமணம் செய்து கொண்டார். இதனால் ராமாமிர்தம் அம்மாள், மனோரமாவை அழைத்துக் கொண்டு காரைக்குடிக்கு அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடி பெயர்ந்தார். குடும்ப வறுமையின் காரணமாக மனோரமாவால் 6ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை. எனவே செட்டியார் வீடுகளில் பணிப்பெண்ணாக வேலை செய்தும், தாயாருடன் பலகாரம் வியாபாரம் செய்தும் வாழ்க்கையை நடத்தி வந்தார். தனது 12வது வயதில் நடிப்புத் தொழிலில் இறங்கிய அவர், பின்னர் தமிழகமே போற்றும் நடிப்பு அரசியாக மாறிப் போனார்.

தொடர்புடைய செய்தி