தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - விவசாயிகள் பாதிப்பு

81பார்த்தது
தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - விவசாயிகள் பாதிப்பு
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது. இந்த நிலையில், கன்னியாகுமரியில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக இன்று (மே 26) தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பரக்காணி - வைக்கல்லூர் இடையே கட்டப்பட்ட தடுப்பணையை தாண்டிச் செல்கிறது. மேலும், அந்த வெள்ளம் விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி