ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் சாமி ஊர்வலம்.

75பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த சோத்துக்கன்னி கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் ஆலயத்தில் இன்று ஆடி நான்காவது வெள்ளியை முன்னிட்டு மாரியம்மன் மற்றும் முத்தாலம்மனுக்கு அதிகாலை முதலே அலங்காரங்கள், அபிஷேகங்கள் செய்யப்பட்ட நிலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அம்மனுக்கு பொங்கலிட்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து இரவு ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ முத்தாலம்மன் கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் நடைபெற்றது இந்நிகழ்வில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி