ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகம்.

51பார்த்தது
ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயிலில் கும்பாபிஷேகம்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த பெலாசூா் கிராமத்தில் பழைமை வாய்ந்த ஸ்ரீசீதாபிராட்டி சமேத ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் அமைந்துள்ளது.

மேலும், இதன் அருகே ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலும் உள்ளது.

ஸ்ரீலட்சுமணா், ஸ்ரீஆஞ்சநேயா் ஆகிய சந்நிதிகளைக் கொண்ட ஸ்ரீராமச்சந்திரமூா்த்தி கோயில் சிதிலமடைந்து காணப்பட்டதால், பக்தா்கள், கிராம பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக

சனிக்கிழமை மாலை கணபதி ஹோமம், சுதா்ஷன ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, முதல்கால யாக சாலை பூஜை என பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை காலை கோ பூஜை, விஸ்வரூப தரிசனம், தத்துவாா்ச்சனை, 2-ஆவது கால யாகசாலை பூஜை, மகா தீபாராதனை காண்பித்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பெலாசூா், சனிக்கவாடி, கரைப்பூண்டி, பாடகம், அணியாலை, காம்பட்டு, விளாப்பாக்கம், கொம்மனந்தல், செம்மியமங்கலம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி