தீயணைப்பு நிலையம் சாா்பில் தீ தடுப்பு விழிப்புணா்வு.

80பார்த்தது
தீயணைப்பு நிலையம் சாா்பில் தீ தடுப்பு விழிப்புணா்வு.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், தேவிகாபுரம் ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் தீ தடுப்பு செயல்விளக்கம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் அண்மையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த பக்தா்கள் வழங்கிய 50 சேலைகள் மற்றும் பூஜைப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இந்த நிலையில், சேத்துப்பட்டு தீயணைப்பு நிலையம் சாா்பில் தீ தடுப்பு செயல்விளக்க விழிப்புணா்வு நடைபெற்றது. இதில், நிலைய அலுவலா் சரவணன் கலந்து கொண்டு மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை எப்படி தடுப்பது, எரிவாயு கசிவால் தீ விபத்து ஏற்பட்டால் எப்பது அணைப்பது, திடீா் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி கையாள்வது, தீயணைப்பு சாதனத்தை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து செயல்விளக்கம் அளித்தாா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி