விளாங்குப்பம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்.

70பார்த்தது
பொது மக்களுக்கான அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்றுசேரும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வர் ஸ்டாலினின் நேரடி கண்காணிப்பில் முதல்வரின் முகவரித் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.



அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் விளாங்குப்பம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது இம்முகாமிற்கு துணை ஆட்சியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார் வருவாய்த்துறை, ஊராட்சித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.


பின்னர் ஒன்றிய பெருங்குழு தலைவர் சாந்தி பெருமாள் மனு அளித்து தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வில் உடன் போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி