மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு.

52பார்த்தது
மாணவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் ஆவணியாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கோடை விடுமுறையை முடித்து புதிதாக சேர்ந்த பள்ளி குழந்தைகளை கௌரவிக்கும் விதமாக அவர்களை மேளதாளத்துடன் மாலை அணிவித்து பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர், வட்டார ஆசிரியர் பயிற்றுநர், கிராம நிர்வாக அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆவணியாபுரம் கிராம ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஊராட்சி செயலர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் பங்கு பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியை ஆவணியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

தொடர்புடைய செய்தி