அண்ணாமலையார் கோவிலில் பிரதோஷ பூஜை

68பார்த்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று ஆனி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால், சந்தனம் என பல்வேறு அபிஷேகம் நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சுவாமி சன்னதியில் உள்ள அதிகார நந்தி, கிளி கோபுரம் எதிரில் உள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டப வளாகத்தில் உள்ள பெரிய நந்தி மற்றும் கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்களில் உள்ள நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அரோகரா கோஷம் எழுப்பி வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி