பெண்களிடம் செல்போன் பறித்தவர் கைது

1056பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் தேவனாம்பட்டு அடுத்த கீழப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த 4 பெண்கள் கட்டிட வேலைக்காக நேற்று திருவண்ணாமலை பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தனர். அவர்களை கட்டிட வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி மர்ம நபர் ஒருவர் அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து கொண்டு தப்பியோடு முயன்றார். பின்னர் அந்த பெண்கள் கூச்சலிட்டதில் போக்குவரத்து காவலர்கள் அவரை துரத்தி பிடித்து செல்போன்களை மீட்டு பெண்களிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

தொடர்புடைய செய்தி