பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் அமைதி ஊர்வலம்

83பார்த்தது
பேரறிஞர் அண்ணா அவர்களின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக சட்டபேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி தலைமையில்,

திமுக மருத்துவரணி துணை தலைவர் டாக்டர். எ. வ. வே. கம்பன் முன்னிலையில், திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் காமராஜர் சிலை அருகில் இருந்து அண்ணா சிலை வரை ஊர்வலமாக சென்று அண்ணாவின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன், கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய கழக செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று மரியாதை செலுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி