திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் அமைந்துள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் நூதன துஜஸ்தம்ப (கொடிமரம்) கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவில் வளாகம் புனரமைக்கப்பட்டு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று புனித நீரை ஊற்றி வழிபட்டனர். இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.