திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த வில்வாரணி பகுதியில் கலசபாக்கம் காவல்துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் அப்போது அங்கு ஆய்வு பணியை மேற்கொண்டிருந்த போளூர் காவல்துணை கண்காணிப்பாளர் நல்லு அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் இடம் தலைக்கவசம் அணியும் படி அறிவுறுத்தல் வழங்கினார் அப்பொழுது ஒருவர் இருசக்கர வாகனத்தில் நான்கு குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்தார் உடனடியாக அவரிடம் அருகில் சென்ற காவல்துணை கண்காணிப்பாளர் நல்லு இருசக்கர வாகனத்தில் நான்கு குழந்தை அழைத்துக்கொண்டு ஐவர் செல்வது பாதுகாப்பற்றது நீங்கள் இதுபோன்று பயணிக்க கூடாது எனவும், தலைக்கவசம் அணிந்துதான் இருசக்கர வாகனத்தை இயக்க வேண்டும் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.