திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி
ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, பிரதோஷ நந்தி, கோயில் கொடிமரம் எதிரே உள்ள நந்தி உள்பட 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு நேற்று மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
பால், பழம், சந்தனம், விபூதி, பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைப் பயன்படுத்தி மாலை 4. 30 மணி முதல் 6 மணி வரை நடத்தப்பட்ட பூஜையின் இறுதியில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது, கோயிலில் திரண்டிருந்த பக்தா்கள் பக்தி முழக்கமிட்டு வழிபட்டனா்.
பிறகு, கோயில் மூன்றாம் பிரகாரத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து எழுந்தருளிய பிரதோஷ நாயகா், பிரகாரத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.