செங்கம் அருகே வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம்

54பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தாழையூத்து ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம் வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது இதில் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.

இந்த முகாமில் நோயாளிகளுக்கு ரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு , சர்க்கரை நோய், மற்றும் கொழுப்பின் அளவு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த வகை கண்டறிதல், சிறுநீர், உப்பு , சர்க்கரை அளவு , கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனை கண் குறைபாடு கண்டறியப்பட்டு இலவச அறுவை சிகிச்சை பரிந்துரை செய்வது மேலும் பொதுமக்களுக்கு சித்த மருத்துவ பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஸ்கேன் வசதி மற்றும் இ. சி. ஜி வசதி உள்ளிட்டவைகள் இந்த முகாம் மூலம் நடத்தப்பட்டது.

முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி மக்களை தேடி மருத்துவம் முதியோர்களுக்கு மருந்து உபகரணங்கள் பெட்டகம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி