வாழை மரங்கள் சரிந்து விழுந்தது, விவசாயிகள் வேதனை

1066பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளான பரமனந்தல், புதுப்பட்டு, தீர்த்தாண்டப்பட்டு, கொட்டாவூர், குப்பநத்தம் ஆகிய ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பல வகையான வாழை சாகுபடி செய்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென இடி மின்னல் மழையுடன் சூறாவளிக்காற்று வீசியது. இந்த சூறைக்காற்றில் சிக்கி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி