திருப்பூர் மாவட்டம் உடுமலை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள காமராஜர் முழு உருவ சிலைக்கு இன்று திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட திருமலை அவர்களுக்கு திரளான கட்சி தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் காமராஜரின் முழு உருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர் திருமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாவட்ட பொருளாளர் பிரகாஷ் குமார் மற்றும் உடுமலை மடத்துக்குளம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக போடிபட்டி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தளிரோடு பொள்ளாச்சி ரோடு வழியாக ஊர்வலமாக வந்தனர். தமிழக வெற்றிக் கழகம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் திருமலைக்கு வரவேற்பு நிகழ்ச்சியால் உடுமலை பொள்ளாச்சி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.