உடுமலை: அகில உலக ஜெபநாள் முன்னிட்டு - சிறப்பு பிரார்த்தனை

1074பார்த்தது
உடுமலை: அகில உலக ஜெபநாள் முன்னிட்டு - சிறப்பு பிரார்த்தனை
திருப்பூர் மாவட்டம் உடுமலை இம்மானுவேல் ஆலயத்தில் நடைபெற்ற அகில உலக ஜெப நாளை முன்னிட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஆராதனையில் பெண்கள் ஐக்கிய சங்கத் செயலாளர் திருமதி பால்மணி காந்திராஜ், பொருளாளர் மல்லிகா மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்த சிறப்பு ஆராதனையில் 5 பெண்கள் பாலஸ்தீனிய மக்களை போல்
ஆடை அணிந்து ஆராதனையை சிறப்பாக நடத்தினர். முடிவில் பயிற்சி ஆயர் இம்மானுவேல் இறையாசி வழங்கினார் இம்மானுவேல் ஆலயத்தின் பொருளாளர் ஜெயக்குமார் பெண்கள் ஐக்கிய சங்கத்தை வாழ்த்தி பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி