உடுமலையில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது

75பார்த்தது
உடுமலையில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது
உடுமலைப்பேட்டை
இன்னர் வீல் சங்கம், ஆர்வி மருத்துவமனை, ஆர்வி கண் மருத்துவ மையம் இணைந்து இன்று உடுமலைப்பேட்டை ஆர். வி மருத்துவமனையில் பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கான ரத்த பரிசோதனை, கண் பரிசோதனை, கண்புரை கண்டறிதல் பரிசோதனை, விழித்திரை பரிசோதனை,
காது மூக்கு தொண்டை பரிசோதனை, பல் பரிசோதனை, மகளிருக்கான சிறப்பு மருத்துவ ஆலோசனைகள், ரத்தத்தில் உள்ள மஞ்சள் காமாலை மற்றும் சர்க்கரை நோய் கண்டறியும் பரிசோதனை என பொதுமக்களுக்கு தலா ரூபாய் 2000 மதிப்புள்ள பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட சுற்றுப்புற பகுதியில் இருக்கும் மக்கள் இந்த இலவச மருத்துவ பரிசோதனையில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

பொதுமக்கள் பலருக்கு கருப்பை புற்றுநோய் குறித்த நோட்டீஸ் வழங்கபட்டது பொதுமக்களுக்கு மருத்துவர்கள் சிவசண்முகம் ரமாதேவி, கீர்த்திதேவி, பரிமளாகுமரேசன், அரவிந்த், விக்ரமவேல், சுருதிதேவி, ஆர்த்திதேவி ஆகியோர் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர் இந்த நிகழ்வில் இன்னர்வீல் சங்கத்தின் தலைவர் டாக்டர் ரமாதேவி செயலாளர் கோதைநாயகி பொருளாளர் ரேணுகாலட்சுமி மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடர்புடைய செய்தி