'கார்ப்பரேட்டுகளை வலுப்படுத்தும் அரசாக மத்திய அரசு செயல்படுகிறது'

56பார்த்தது
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராகவும் கர்நாடக மாநில பொறுப்பாளராக பொறுப்பேற்று திருப்பூர் மாவட்டத்திற்கு வருகை தந்த கோபிநாத் பழனியப்பனுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவினாசி சாலை, திருமுருகன்பூண்டி அருகே உள்ள முன்னாள் பாரத பிரதமர் ராகுல் காந்தியின் திருவுருவப்படத்திற்கு தேசிய செயலாளர் கோபிநாத் பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோபிநாத் பழனியப்பன், தற்போது வரை 27 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றிய தனக்கு பதவி உயர்வு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிக அர்ஜுனா கார்கே, இளம் தலைவர். ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்திக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தும் வரை ஓய்வு தனக்கு ஓய்வு இல்லை. மத்திய அரசு கார்ப்பரேட்டுகளை வலுப்படுத்தும் அரசாக செயல்படுகிறது. ஜாதி மதம் பேதமின்றி இருக்கும் கட்சி காங்கிரஸ் கட்சி என்றார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி