இருசக்கர வாகனத்தில் சென்று குறைகளை கேட்டறிந்த மேயர்

4672பார்த்தது
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் பொதுமக்களை சந்தித்து மாநகராட்சி மேயர் குறைகளை கேட்டறிந்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் மாநகராட்சி மேயர் பொதுமக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே என் பி சுப்பிரமணிய நகர், செரங்காடு, அமர்ஜோதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவாறு அப்பகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து பொதுமக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பொதுமக்கள் தெரிவித்த குறைகளை உடனடியாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று அதனை நிவர்த்தி செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து அமர்ஜோதி நகர் பகுதியில் உள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் மையத்தில் மேற்கொள்ளும் பணிகளையும் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி