சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது அம்பலம்

171708பார்த்தது
சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது அம்பலம்
புதுச்சேரி சோலை நகரில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன 9 வயது சிறுமி, கால்வாயில் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேகத்தின் பேரில் விவேகானந்தன் (59), கருணாஸ் (19) ஆகியோரை பிடித்து விசாரித்ததில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது உயிரிழந்துவிட்டதாகவும், சடலத்தை சாக்குப்பையில் போட்டு கால்வாயில் வீசிச் சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து கொலை வழக்காக மாற்றியதோடு, போக்சோ வழக்கும் சேர்க்கவுள்ளனர்.

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த தம்பதியினரின் 9 வயதுடைய இரண்டாவது மகள் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த சனிக்கிழமை மதியம் மாயமானார். இது தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐந்து தனிப்படைகள் அமைத்து தேடி வந்த நிலையில் மாணவி அருகே உள்ள அம்பேத்கர் நகர் பகுதி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி