நிலத்தின் உரிமையையும், நிலத்தினையும் மீட்டுத் தரக் கோரிமனு.

568பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மலைக்கோவிலூர் நாகம்பள்ளியைச் சேர்ந்த அருள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார் அந்த மனுவில்
திருப்பூர் மாவட்டம், ஈஸ்வரமூர்த்தி நகர் 6வது வீதியில் வசித்து வந்தவர் தற்போது உடுமலைப்பேட்டை வட்டம், திருமூர்த்தி நகரில் வசிக்கும் ஆறுமுக கவுண்டர் மகன் நாகராஜன் என்பவருக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை என்னிடம் ஒரு போக்கிய உடன்படிக்கையின் மூலம் 11. 08. 2008 ந் தேதியில் சுவாதீன ஒப்டைப்பு செய்தார். அதன் பிறகு மேற்படி போக்கிய உடன்படிக்கைக்கு விரோதமாக மூன்றாம் நபர்களுக்கு விற்பனை செய்து விட்டார். மேற்படி சொத்துக்கள் தொடர்ந்து போக்கிய உடன்படிக்கைதாரர் என்ற முறையில் எனது சுவாதீனத்தில் இருந்து வருகிறது. மேற்படி சொத்துக்கள் 10 12. 2028 ஆம் தேதி வரை சுவாதீனத்தின் அடிப்படையில் எனக்கு உரிமை இருக்கிறது. நாகராஜனிடம் கிரையம் பெற்ற உடுமலைப்பேட்டை வட்டம், பத்மநாபன் மேற்படி சொத்துக்களை அவரின் சகோதரி உமாதேவிக்கு பத்திரங்கள் பதிவு செய்து கொடுத்ததாக எனக்கு தெரிய வருகிறது. ஒரு பகுதி சொத்துக்களை விருதுநகர் மாவட்டம், கரியாப்பட்டு தாலுக்கா, கம்பிக்கிடி (அஞ்சல்) பூல்லூரில் வசிக்கும் திருவட்டை மகன் கருப்பண்ணன் என்பவர் கிரையம்

தொடர்புடைய செய்தி