அங்கன்வாடியில் மோசடி - தட்டிக் கேட்ட உதவியாளர் பணியிட மாற்றம்

6899பார்த்தது
அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறதா? தட்டிக் கேட்ட உதவியாளர் பணியிட மாற்றம். திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் முருகப்பாளையம் A. D. காலனி பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். இவர் கடந்த 20 வருடங்களாக வஞ்சிபாளையம் அங்கன்வாடியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும், இது குறித்து குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சரஸ்வதியிடம் தெரிவித்தபொழுது, இது குறித்து வெளியில் சொல்ல வேண்டாம் என்று தன்னை மிரட்டியதாகவும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் வஞ்சிபாளையத்தில் பணியாற்றி வந்த தன்னை பேருந்து வசதி இல்லாத 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதுப்பாளையம் அங்கன்வாடிக்கு குழந்தைகள் திட்ட வளர்ச்சி அலுவலர் சரஸ்வதி இடமாறுதல் செய்துள்ளார். இது குறித்து குழந்தைகள் அவரிடம் கேட்டதற்கு, புதுப்பாளையம் சென்றால் பணியில் இரு இல்லையென்றால் வேலை விட்டு சென்று விடு என்று மிரட்டும் தோணியில் பேசுகிறார். எனவே எனக்கு மீண்டும் வஞ்சிபாளையம் அங்கன்வாடியில் பணி அமர்த்த வேண்டும், கடந்த ஐந்து மாதமாக பணிக்குச் செல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், மகளின் கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் தவித்து வருவதாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி