திருப்பூர்: இளஞ்சிவப்பு நிறத்தில் வரும் நிலத்தடி நீர்

59பார்த்தது
திருப்பூர்: இளஞ்சிவப்பு நிறத்தில் வரும் நிலத்தடி நீர்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கரைப்புதூர் ஊராட்சி அபிராமி நகர் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கரைப்புதூர் ஊராட்சி லட்சுமி நகர், அபிராமி நகரில் 150 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதி தொழில் வட்டாரமாக இருக்கிறது. அபிராமி நகரில் கடந்த 4 மாதங்களாக நிலத்தடி நீர் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறி உள்ளது. இந்த மாசடைந்த நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் உடல் நிலை பாதிப்பு ஏற்படுகிறது. எனவே இப்பகுதி பொதுமக்கள் நலன் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி