தசராவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் காப்புக் கட்டிவிட்டு செக்காரக்குடியை சேர்ந்த 70 பேர் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் சிலர் பயணித்த லோடு ஆட்டோ கல்லாமொழி அருகே வந்தபோது லாரிமீது நேருக்கு நேர் மோதியதியது. இந்த கோர விபத்தில் பெரும்படையான்(20 வயது), பெருமாள்(25 வயது) ஆகிய 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 13 பேர் காயமடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.