திருப்பூரில் மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு

6317பார்த்தது
திருப்பூரில் மர்மமான முறையில் பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

திருப்பூர் சாயப்பட்டறை விதி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 45 வயதுடைய பிரியா என்ற பெண் கணவரை விட்டு பிரிந்து வந்த தங்கி உள்ளார். இவர் அக்கம்பக்கத்தில் உள்ள உணவகங்களுக்கு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இன்று காலை வீட்டில் அவர் சடலமாக இருந்துள்ளார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை அடுத்து திருப்பூர் வடக்கு காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் உயிரிழப்பிற்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி