செல்போனை திருடிய முதியவர் சிசிடிவி கட்சி வைரல்.

85பார்த்தது
திருப்பூர் பேருந்து நிலையத்தில் சந்தேகம் கேட்பது போல நடித்து செல்போனை திருடிய முதியவர் சிசிடிவி கட்சி வைரல்.

திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் சதீஷ் என்பவர் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார் இவரது கடைக்கு நேற்று 50 வயது மதிக்கத்தக்க நபர் வந்து தனது செல்போனில் டவர் இல்லை என சோதனை செய்ய கொடுத்துள்ளார். தொடர்ந்து சந்தேகம் கேட்பது போல நடித்த அவர் கடையின் டேபிள் மேலே இருந்த செல்போனை தனது இடது கையால் எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சந்தேகம் தீர்ந்தது போல அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றார் சிறிது நேரம் கழித்து கடையில் பணியாற்றி வந்த நபர் செல்போன்‌ இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடைக்கு வந்த நபர் செல்போனை திருடி சென்றது தெரியவந்தது. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி