பல்லடம் அருகே ரோட்டோர மரத்தில் மோதிய கார் - போலீசார் விசாரணை

2231பார்த்தது
பல்லடம் அருகே மங்கலத்தில் இருந்து காமநாயக்கன்பாளையம் சென்ற கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் எதிரே உள்ள மரத்தின் மீது மோதி விபத்து- அம்மா மகன் படுகாயம். காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை எடுத்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் 32. இவர் தனது அம்மா ராமாத்தாள் என்பவருடன் மங்களத்தில் இருந்து காமநாயக்கன்பாளையம் நோக்கி தனது நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது புளியம்பட்டி பிரிவை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் எதிரே உள்ள மரத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் தாய் ராமாத்தாள் மகன் பிரகாஷ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவ்வழியே சென்றவர்கள் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல்லடம் அருகே சாலை விபத்தில் அம்மா மகன் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி