பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை

68பார்த்தது
பள்ளி வகுப்பறை கட்ட பூமி பூஜை
திருப்பூர் 1-வது மண்டலம் 24-வது வார்டு சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு தமிழக அரசின் மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ. 1 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளத்தில் 5 வகுப்பறைகளும், முதல் தளத்தில் 5 வகுப்பறைகளும் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 24- வது வார்டு மாமன்ற உறுப்பினரும், ம. தி. மு. க. மாநகர மாவட்ட செயலாளருமான ஆர். நாகராஜ் தலைமை தாங்கினார். மாநக ராட்சி அதிகாரி சரவணகுமார், பள்ளி ஆசி ரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி