திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம், தை மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூரில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் ஆகியோர் அதிக அளவில் வருகை தந்ததால் திருச்செந்தூரில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது.