மதுரை முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவை ஆட்சியர் பிறப்பித்துள்ளதால் போராட்டங்கள், தர்ணா நடத்த முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி திருப்பரங்குன்றம் கோயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டுள்ளது.