6ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

55பார்த்தது
திருப்பூர்  மாவட்டம் பல்லடம் அருகே புகழ் பெற்ற 6 ஆம் ஆண்டு அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டி திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்க விழா குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது வருகிறது. இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன், மனிதவள மேலாண்மைதுறை அமைச்சர் கயல்வலி செல்வராஜ் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்தனர்.  


சுமார் 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் இந்த போட்டியில்  பங்கேற்கின்றனர்.


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் , திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மாடுபிடி வீரர்களுக்கான  உறுதிமொழியை படித்து அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.


மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் உறுதிமொழிகளை முன்மொழிய மாடுபிடி வீரர்கள் வழி மொழிந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி