மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்கள் பரிசோதனை செய்யப்படும் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்களின் பரிசோதனைகளின் அந்தரங்க தருணங்கள் தொடர்ந்து டெலிகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வீடியோ குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் சிசிடிவி காட்சிகள் என்று கூறப்படுகிறது.