உடுமலை தபால் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!!

59பார்த்தது
உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு உடுமலை வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகிய முப்பெரும் சட்ட திருத்தம் மற்றும் பெயரை மாற்றத்தை கண்டித்தும், மேலும் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சட்ட திருத்தம் செய்வதை கண்டித்தும் புதிய சட்டங்களை திரும்ப பெற கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் கே. எம். ராஜேந்திரன், பொருளாளர் பிரபாகரன், துணை தலைவர் சிவராமன் உள்ளிட்ட மூத்த, இளம் வக்கீல்கள் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி