பொதுமக்கள் அவதி! ஊராட்சி மன்ற தலைவர் நடவடிக்கை

1023பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் துங்காவி பஞ்சாயத்துக்கு உட்பட்ட உடையார்பாளையம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. இதனால் மக்கள் வெயிலில் நின்று பொருட்கள் வாங்கும் அவல நிலை உள்ளது.
இதை விரைவாக சரி செய்யுமாறு பா. ஜ. க உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டச் செயலாளர் விஜயகுமார் ஊராட்சி மன்ற தலைவரிடம் கோரிக்கை வைத்தார். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன் அவர்கள் தொடர்பு கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் சிரமத்தை போக்கிடுமாறு அறிவுறுத்தினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி