திமுக நன்றி அறிவிப்பு கூட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு

559பார்த்தது
திமுக நன்றி அறிவிப்பு கூட்டம்! அமைச்சர்கள் பங்கேற்பு
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் மற்றும் உடுமலைப்பேட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்
அயறாது தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம்
நேற்றைய தினம் (29/04/2024) மைவாடியில்
பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே ஈஸ்வர சாமி இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்களும், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பு அமைச்சரும், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அரா. சக்கரபாணி அவர்களும் தலைமை தாங்கினார்கள். திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர்
திரு. இல. பத்மநாபன் அவர்கள் முன்னிலை வகித்தார். மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா. ஜெயராமகிருஷ்ணன் அவர்களும் மடத்துக்குளம், உடுமலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கழக ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், வழக்கறிஞரணி, இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி