புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமியின் சடலம் கடந்த மாதம் 5ம் தேதி சாக்குமூட்டையில் கண்டெடுக்கப்பட்டது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவத்தில் சிறுமியை சீரழித்து கொன்ற விவேகானந்தன் மற்றும் கருணாஸ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் போலீசார் புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் சிறுமி கொலை வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்கின்றனர்.