2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை

1561பார்த்தது
2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலை
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை சேர்ந்த சுரேஷ் - பவித்ரா தம்பதிக்கு ரித்திக் (9), ரித்திகாஸ்ரீ (7) என்ற குழந்தைகள் இருந்தனர். நேற்று காலை பவித்ரா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு விவசாய நிலத்திற்கு சென்று வருதாக கணவனிடம் கூறிவிட்டு சென்றார். பின்னர் அங்கிருந்த கிணற்றில் குழந்தைகளை தள்ளிவிட்டு கொன்று தானும் தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி